அரசாங்கம் எரிபொருள் விலையை திருத்தியமைத்த போதிலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (01) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை எரிபொருள் விலை அதிகரிப்பு வீதத்தின் அடிப்படையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க ஏற்பாடுகள் எதுவும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
