ஜப்பானின் இஷிகாவாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்த நிலநடுக்கத்தால் அணுமின் நிலையங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என சோதித்து வருவதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
