போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகியோருக்கு தப்பிச்செல்ல உதவிய இராணுவ சிப்பாய் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த இராணுவச் சிப்பாய் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.