பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவர் சார்பில் பிணையில் ஆஜராகியிருந்த பிணையாளர்களை நாளை (13) உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விமல் வீரவங்சவின் பிணையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
