வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று தற்செயலாக தாக்குதலை நடத்தியுள்ளது.
சம்பவத்தில் சுமார் 85 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியாவில் பதிவான மிக மோசமான இராணுவ குண்டு வீச்சு சம்பவங்களில் ஒன்றாக இது பதிவானது.
தற்செயலாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நைஜீரிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந் நிலையில் ஜனாதிபதி போலா அகமட் டினுபு செவ்வாயன்று விசாரணைக்கு உத்தரவிட்டார்.