Tuesday, January 13, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்திலிருந்து 35 பேர் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்திலிருந்து 35 பேர் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று (04) காலை 06.35 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த 35 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு திரும்ப முடியாமல் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் குழு என தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடத்தப்பட்ட 35 பேரில் ஒரு ஆண் வீட்டுப் பணியாளர் மற்றும் 34 பெண் வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles