குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று (04) காலை 06.35 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த 35 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு திரும்ப முடியாமல் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் குழு என தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்ட 35 பேரில் ஒரு ஆண் வீட்டுப் பணியாளர் மற்றும் 34 பெண் வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர்.