Friday, May 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் பெர்னாண்டோ மீண்டும் சிஐடிக்கு

ஜெரொம் பெர்னாண்டோ மீண்டும் சிஐடிக்கு

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) காலை இரண்டாவது நாளாகவும் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் (29) இலங்கை வந்தடைந்தார்.

குறித்த குற்றச்சாட்டுக்காக அவர் நாடு திரும்பியதும் 48 மணிநேரத்துக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவுக்கு அமைவாகவே அவர் நேற்று காலை சிஐடியில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அவர் இதன்போதுஇ சுமார் எட்டு மணிநேரம் வாக்கு மூலம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles