Monday, May 5, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவுக்கண புத்தர் சிலை சர்ச்சை தொடர்பில் விசாரணை

அவுக்கண புத்தர் சிலை சர்ச்சை தொடர்பில் விசாரணை

அவுக்கண புத்தர் சிலைக்கு அங்கி அணிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையின் கூற்றுப்படி, தொல்பொருள் மதிப்புள்ள சிலையின் தற்போதைய தன்மையை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அனுராதபுர காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கண புத்தர் சிலை இலங்கையின் “நின்று நிற்கும் புத்தர் சிலைகளில்” ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் வரலாற்றின் படி, கி.பி 5 ஆம் நூற்றாண்டில் மன்னர் தாதுசேன இந்த சிலையை உருவாக்கினார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களால் வழிபடப்படும் அவுக்கண புத்தர் சிலைக்கு அங்கி அணிவிக்க குழுவொன்று முயற்சிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles