சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்தில் இருந்து 990,000 ரூபாவை செலவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.