சென்னைக்கு தொழில் நிமித்தம் சென்ற 50 வயதுடைய இலங்கை வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
எனினும் அவரை மீட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
31 – 47 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபரின் மகள் என அடையாளம் காணப்பட்ட ஒரு பெண், தனது தந்தையை கடத்திய சிலரிடமிருந்து 15 இலட்சம் இந்திய ரூபாவைக் கொடுத்து விடுவிப்பதற்காக தனக்கு அழைப்பு வந்ததாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.