Wednesday, June 11, 2025
26.7 C
Colombo
வடக்குகைகள் - கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கைகள் – கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியாவில் கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஈச்சங்குளம் – கருவேப்பங்குளம் பகுதியில் உள்ள குறிசுட்டகுளம் ஏரியில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.

இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. சடலம் 20 அல்லது 25 வயதுடைய பெண்ணின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது கைகால்களை காணவில்லை எனவும் எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.

அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளது.

இறக்கும் போது அவர் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles