பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகில் சென்ற ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மீன்பிடி படகில் பயணித்த மற்றைய நபர், கப்பலின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (13) காலை நுவன் சோன் 03 என்ற மீன்பிடி கப்பலில் கடலுக்குச் சென்ற மொஹமட் ஹுசைன் மொஹமட் என்ற நபரே கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் பேருவளை – சமட் மாவத்தை பகுதியைச் சேர்ந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களும் கப்பலின் உரிமையாளரும் பேருவளை கடற்படை நிலையத்திற்கும் பேருவளை பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.