பேலியகொட பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 கிலோ கிராம் சீனி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விசாரணைகள் முடியும் வரை களஞ்சியசாலையில் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களின் களஞ்சியசாலைகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பிரதான சீனி இறக்குமதியாளர் ஒருவரின் களஞ்சியசாலையை பரிசோதிக்க சென்ற போதே இந்த சீனி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களஞ்சியசாலையைச் சோதனையிடச் சென்றபோது, தங்களிடம் கையிருப்பு இல்லையெனவும், மேலதிக விசாரணையின் போது கிடங்கில் 270 மெற்றிக் தொன் சீனி இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து, நுகர்வோர் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் கையிருப்பு மற்றும் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டது.