எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி உந்துவப் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நல்லத்தண்ணி பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
அத்துடன், குறித்த கலந்துரையாடலின் போது, சிவனொளிபாதமலைக்கு யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.