Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தை விரிவாக்கவும் தற்போது காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் விசேட வாரத்தை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இந்த விசேட வாரம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சு கூறியுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்து, தாமதமின்றி தகுதியான பயனாளிகளுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த விசேட வாரம் அமுல்படுத்தப்படுகின்றது.

இதுவரையில் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காத குடும்பங்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles