Sunday, June 28, 2026
27.8 C
Colombo
செய்திகள்உலகம்11 இலங்கையர்கள் காசாவை விட்டு வெளியேறினர்

11 இலங்கையர்கள் காசாவை விட்டு வெளியேறினர்

11 இலங்கையர்கள் ரஃபா எல்லைக் கடவை மூலமாக காசாவிலிருந்து வெளியேறி எகிப்த‍ை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், பலத்த காயங்களுக்குள்ளானவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற ரஃபா எல்லை கடவை இரண்டாவது நாளாக தொடர்ந்தும் திறக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த இலங்கையர்கள் குழு காசாவை விட்டு வெளியேறியுள்ளது.

முன்னதாக 17 இலங்கையர்கள் காசாவை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தனர்.

எனினும் 11 இலங்கையர்கள் மாத்திரமே ரஃபா எல்லைக் கடவையைப் பயன்படுத்தி எகிப்துக்குள் நுழைய முடிந்தாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles