கொழும்பிலிருந்து கட்டுநாயக ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
நேற்று (23) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் 19 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கட்டுநாயக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.