சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மற்றுமோர் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை குறித்து குழு விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
இந்த தகவலை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் வரிக் கொள்கை, ஏனைய பொருளாதார விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும்.
இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
