வடமேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் உணவிலும் முட்டையை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
