கடந்த பருவத்தில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக, யாழ் பருவத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன், வரட்சியான காலநிலையினால் 58,770 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

