Tuesday, June 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதடுப்பூசியால் மரணித்தவரின் உயிர் மாதிரிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது

தடுப்பூசியால் மரணித்தவரின் உயிர் மாதிரிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது

இலங்கை தேசிய வைத்தியசாலையில் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த நபரின் உயிர் மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

நோயாளிக்கு கொடுக்கப்பட்ட கோ-அமோக்ஸிக்லாவ் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி மாதிரிகள் அவுஸ்திரேலியாவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நோயாளியின் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிப்பதில் இந்த ஆய்வுகளின் முடிவுகள் முக்கியமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரக்காபொல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர், காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தவர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Co-amoxiclav இன் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles