Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு37 கண் சத்திரசிகிச்சைகளில் இருவர் பூரணமாக பார்வையிழப்பு

37 கண் சத்திரசிகிச்சைகளில் இருவர் பூரணமாக பார்வையிழப்பு

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவிலும் இருவர் பூரண பார்வையை இழந்துள்ளதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும் உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் வைத்தியர்களால் தவறாகியதாக நினைக்கின்றனர் என்றும் இதற்கான பொறுப்பை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles