தனது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மகன் இரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போகம்பர – கைகாவல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போம்ப குமார என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சந்தேக நபர், அவருக்கு சொந்தமான ஹோட்டலின் அறையில் வைத்து தாயை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 74 வயதான தாய் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.