துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ள அக்போ யானையை விசேட பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அக்போ யானையின் இடப்பக்க காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என வனஜீவராசிகள் திணைக்கள சுகாதார பணிப்பாளர் கால்நடை வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.
கட்டுத்துப்பாக்கியினால் அக்போ யானயைின் இடது காலில் காயமேற்பட்டு, தற்போது 2 மாதங்களுக்கும் மேலாகின்றது.
இந்நிலையில், அனுராதபுரம் – திரப்பனை வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் யானைக்கு சிகிச்சை அளித்து உணவு வழங்கி வருகின்றனர்.