இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) சொந்தமான ‘Channel Eye’ ஐ லைகா குழுமத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூடியதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது ‘சேனல் ஐ’ தொடர்பான பிரேரணை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஜூலை மாத இறுதியில் SLRC மற்றும் Lyca குழுமம் இந்த விஷயத்தில் பொதுவான ஒருமித்த கருத்தை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறெனினும் இது தொடர்பில் SLRC பணிப்பாளர் சபை அல்லது வெகுஜன ஊடக அமைச்சின் அனுமதி பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.