ஹவாயில் உள்ள Maui மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் தீப்பரவல் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த தீப்பரவலால் சுமார் 1,000 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Maui மாகாணத்தில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், உலங்கு வானூர்திகள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.