பதுளை போதனா வைத்தியசாலைக்கு நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 07 கோடி ரூபா நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதனை செலுத்தாத காரணத்தினால் வைத்தியசாலையின் மருத்துவ விடுதி, தாதியர் பயிற்சிப் பிரிவு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றுக்கான மின் விநியோகம் நேற்று துண்டிக்கப்பட்டது.
இந் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் ரூ. 20 மில்லியன் தொகையை செலுத்தியதாகவும், எஞ்சியுள்ள நிலுவைத் தொகை ஒரு வாரத்திற்குள் செலுத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது.
இதனால் இலங்கை மின்சார சபை மேற்கூறிய பிரிவுகளில் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.