அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவரை மத்துகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுதுவெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நெலுவா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடியதற்காக சந்தேகநபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
