திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் போது மக்களின் நலன் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கவர்ச்சிகரமான பெயர்களுடன் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்கள் மக்களுக்கு சேவை செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.