Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆற்றில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சக நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதுடன், அதன்போது தொரபிட்டிய ஆற்றில் நீராடச் சென்ற வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles