ஹிக்கடுவ பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திய 40 சிறுவர்கள் உணவு விஷம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்த, குறித்த ஹோட்டலை ஹிக்கடுவ பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர்.
அதன்போது ஹோட்டலின் நீர் தொட்டி அசுத்தமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி, குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் களுத்துறை ஆய்வாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை? குறித்த விடுதிக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்குப்பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.