ஊடக நிறுவனங்களுக்கு சட்டபூர்வமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவும், ஊடக சமத்துவத்தை பேணுவதற்காகவுமே ஒளிபரப்பு வெளியீட்டு அதிகாரசபை சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனூடாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களுக்கோ இடையூறு ஏற்படுத்தப்படாது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.