Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்குதலில் இருவர் பலி

காட்டு யானை தாக்குதலில் இருவர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் காட்டு யானைகளின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மீது நேற்று (30) பிற்பகல் யானை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 64 வயதுடைய பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

மேலும், காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இன்று காலை மெதவச்சிய – புனேவ – குடா ஹல்மில்லேவ பிரதேசத்தில் 73 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது பயிர்ச்செய்கை நிலத்திற்குச் சென்று வீடு திரும்பும் போதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles