குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிகமுவ வீதியிலுள்ள எரிபொருள் விற்பனை நிலையமொன்றுக்கு சென்று போலி நாணயத்தாள் ஒன்றை கையளித்த நபர் ஒருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போலி நாணயத்தாள் வழங்கியதாக 119க்கு கிடைத்த அழைப்பின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
சந்தேகநபர் 1000 ரூபா நாணயத்தாளொன்றை நிரப்பு நிலையத்தில் உள்ள ஊழியரிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.