கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள 12 பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தில் பதுளை, ஹல்துமுல்ல, ஹாலியால, பசறை, பத்தேகம, யக்கலமுல்ல, எல்பிட்டிய, நாகொட, கேகாலை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல, மாத்தறை மாவட்டத்தின் கொட்டோபொல மற்றும் பஸ்கொட ஆகிய இடங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பசறை, எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
