களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருளுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த தகவலையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 56 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் களுத்துறை தெற்கு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.