உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) மீண்டும் கூடவுள்ளது.
இதற்கு முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கலந்துரையாடலுக்கான அனுமதி கோரி கடிதம் அனுப்பியிருந்ததாகவும், இந்த வாரத்தில் கலந்துரையாடலை நடத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, பிரதமருடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும்.
