சர்வதேச நாணய நிதித்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை, இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்கான உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பை வெளியிட்டபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.