தான் பாலத்திலிருந்து கடக்க வைக்க முயற்சித்தது நாமல் ராஜபக்ஷவை அல்ல எனவும், தாய் நாட்டையே அவ்வாறு கடக்க வைத்ததுடன், இன்று உலகமே அதை அறிவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு காரணங்களை கூறி எதிர்க்கட்சி எனக்கு உதவுவதை மறுத்தது. எனது பதவியேற்பு அரசியலமைப்பு முரணானது என கூறியது. எனது நோக்கம் ராஜபக்ஷர்களை பாதுகாப்பது என சாடினர். இந்த இக்கட்டான பாலத்திலிருந்து நான் கரையேற்ற நினைப்பது நாமலை அல்ல நமது தாய் நாட்டை என்பதை தற்போது உலகமே அறிந்துள்ளது என்றார்.