ஆசிரியர்களால் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றச் சபையை கலைத்தமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.