இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் முதல் 1,678 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.
தென்கொரியாவில் முதன்முறையாக 1398 பேர் பணியமர்த்தப்பட்டதாகவும், 280 பேர் சேவைக்காலம் முடிந்து அதே இடத்திற்கு திரும்பியதாகவும், 1490 பேர் உற்பத்தித் துறைக்காகவும், 188 பேர் மீன்பிடித் துறைக்காகவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 1,662 ஆண்களும் 16 பெண்களும் உள்ளடங்குவதாகவும், இந்த ஆண்டு 6,500 இலங்கையர்கள் தென் கொரியாவில் பணிபுரிய எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.