பிலியந்தலை பொகுந்தர சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுகேகொட – கொஹுவல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மோட்டார் சைக்கிள் சாரதி பிலியந்தலையிலிருந்து பொரலஸ்கமுவ நோக்கி சென்றுகொண்டிருந்த போது அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பலத்த காயமடைந்த குறித்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
லொறியின் சாரதி சகல பாதுகாப்பு முறைகளையும் கையாண்டு லொறியின் சிக்னல் விளக்குகளை ஒளிரச் செய்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.