தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது.
திறைசேரியின் நடவடிக்கை பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தின் பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அச்சு நடவடிக்கைகளுக்கான பணத்தை பெற்றுத்தருமாறு கோரி இதற்கு முன்னர் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய போதிலும்இ அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அரச அச்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.