சீனாவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்படாததால், 2021ஆம் ஆண்டில்சுமார் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்காட்சி அரங்குகளை தயார் செய்ய சுமார் 72 இலட்சம் ரூபாவும், கண்காட்சியாளர்களை தெரிவு செய்வதற்காக பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஏறக்குறைய 50,000 ரூபாவும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை செலவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.