Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரூபாவின் பெறுமதி அதிகரிப்பு : அரசின் முக்கிய தீர்மானங்களே காரணமாம்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு : அரசின் முக்கிய தீர்மானங்களே காரணமாம்

அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2022 செப்டெம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2023 பெப்ரவரிக்குள் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

2022 செப்டெம்பரில் 94.9% ஆக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1% ஆகக் குறைந்துள்ளது.

2022 செப்டெம்பரில் 29,802 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 261மூ அதிகரித்து 2023 பெப்ரவரிக்குள் 107இ639 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இந்த அபிவிருத்திகள் அனைத்தும் சாத்தியமானதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles