சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறும் நோக்கில் பல ஆடம்பர இறக்குமதிகள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் வரிகளை அதிகரிக்க பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளைத் தவிர, பல இறக்குமதிகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
வரிகளை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதை பாகிஸ்தான் அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.