எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதை இனி மேற்கொள்ள முடியாது என அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்துக்கு கங்கானி லியனகே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.