கேப்ரியல் புயல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் காரணமாக 46 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து பிரதமர், கிறிஸ் ஹிப்கின்ஸ் நிவாரணங்களை வழங்குமாறு பணித்துள்ளார்.
அதற்காக 11.5 மில்லியன் நியூசிலாந்து டொலர்கள் உதவித் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.