அடுத்த வருடம் முதல் தரம் 6 முதல் 13 வரையான அனைத்து தரப் பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.