ராஜபக்ஷ குடும்பத்தின் ஐந்து சதம் கூட வெளிநாட்டு வைப்புகளில் இல்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்ற பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீளக் கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தி செய்வோம் என சிலர் வழங்கும் வாக்குறுதிகளுக்கு மக்கள் வீழ்ந்து விட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் இதே பொய்யை கூறினார்கள் என அவர் குறிப்பிட்டார்.